5. இந்திரவிழவூரெடுத்த காதை

176 நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால

176
உரை
178

        நால்வகைத் தேவரும் - நால்வகைப்பட்ட தேவரும், மூவறு கணங்களும் - பதினெண் வகைப்பட்ட கணங் களும் என, பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து - வேற்றுமை தெரிந்து வகுக்கப்பட்ட இனமாகிய தோற்றத்தை யுடைய, வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் - வெவ்வேறு கடவுளரது விழா ஒரு பக்கம் சிறக்க :

        நால்வகைத் தேவராவார்: வசுக்கள் எண்மரும். ஆதித்தர் பன் னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் என நால்வகைப்பட்ட முப்பத்து மூவர். மூவறு கணங்களாவார்: தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர்; இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போக பூமியோர் என்னு மிவர்; பிறவாறு முரைப்பர்.