5. இந்திரவிழவூரெடுத்த காதை


180
அறவோர் பள்ளியும் அறனோம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
திறவோ ருரைக்குஞ் செயல்சிறந் தொருபால

179
உரை
181

        அறவோர் பள்ளியும் - அருகர் புத்தர் பள்ளிகளிலும், அறன் ஓம்படையும் - அறத்தினைப் புரக்கும் சாலைகளி லும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் - மதிற் புறத்தேயுள்ள புண்ணியத் தானங்களிலும், திறவோர் உரைக் கும் செயல் சிறந்து ஒருபால் - அறத்தின் கூறுபாடுகளை யுணர்ந் தோர் தருமம் போதிக்கும் செயல் ஒருபக்கம் சிறக்க ;

       
ஓம்படை - பாதுகாவல் ; ஈண்டு அவ்விடத்தை யுணர்த்திற்று. கோட்டம் - ஈண்டு மதில். புண்ணியத்தானம் - பொதியின் முதலாயின. மணிமேகலையுள், 1 "நுதல்விழி நாட்டத் திறையோன்
முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக, வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை, ஆறறி மரபி னறிந்தோர் செய்யுமின், தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும், புண்ணிய நல்லுரை
யறிவீர் பொருந்துமின்" என வருதல் ஈண்டு அறியற்பாலது.


1 மணிமே, 1 : 54--9.