5. இந்திரவிழவூரெடுத்த காதை




215
இருநில மன்னற்குப் பெருவளங் காட்டத்
திருமகள் புகுந்ததிச் செழும்பதி யாமென
எரிநிறத் திலவமும் முல்லையும் அன்றியுங்
கருநெடுங் குவளையுங் குமிழும் பூத்தாங்கு
உள்வரிக் கோலத் துறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல

212
உரை
217

        இருநில மன்னற்குப் பெருவளம் காட்ட - பெரிய நிலத்தினையுடைய அரசற்குத் தனது பெரிய வளத்தினைக் காட்ட வேண்டி, திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம் என - இலக்
குமி வந்து புகுந்திருப்பது இந்தச் செழுமையுடைய நகராகு மெனக் கருதி, எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் - எரிபோலும் நிறத்தையுடையதோர் இலவ மலரும் பல முல்லை
யரும்புகளும் அன்றியும், கருநெடுங் குவளையும் குமிழும் பூத்து - இரண்டு பெரிய நீலோற்பல மலரும் ஒரு குமிழ மலரும் ஆகிய இவற்றைப் பூத்து, ஆங்கு - பூத்த அப்பொழுதே, உள்வரிக் கோலத்து உறுதுணை தேடி - உள்வரிக் கோலத்தோடு தனக்குப் பொருந்திய துணையாகிய திருமகளைத் தேடி, கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல் - கள்ளத்தையுடைய தாமரை திரிதலும் உண்டாயிற்றோ எனவும்,

       
திருமகள் புகுந்தது இச் செழும்பதி என்றிருப்பினும், பதிக்கண் புகுந்துளாள் என்பது கருத்தாகக் கொள்க. தனது வளம் - தன்னா லாகும் வளம்; செல்வமும் அழகும். இலவம் வாயும், முல்லை பல் லும், குவளை கண்ணும், குமிழ் மூக்கும், கமலம் முகமும் ஆம். நீர்ப் பூவாகிய கமலம் கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ ஆகியவற்றைத் தன்னகத்தே பூத்த தென்றார். உள்வரிக் கோலம் - கிருத்திரிம வேடம் ; பொய்யுரு. என்றும் தன்னகத் திருப்பாளாகலின் திருமகளைத் தாமரைக்குத் துணை யென்றார். கள்ளக் கமலம் - கள்ளையுடைய அக் கமலம் என்பது இயல்பாய பொருள். தாமரை மலரே இலவம் முதலியவற்றைப் பூத்துக் கொண்டு உருத்திரிந்து முகம் என்ற பெயருடன் திரியா நிற்கின்றது என அற்புதம் தோன்றக் கூறினார். ஆங்கு, அசையுமாம்.