5. இந்திரவிழவூரெடுத்த காதை



220
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாணுடைக் கோலத்து நகைமுகங் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவியாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென

218
உரை
223

        மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி - அரசனது செங்கோலை மறுத்ததாகுமென்றஞ்சி, பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் - பல வுயிரையும் பருகும் திறந்த வாயையுடைய கூற்றம், ஆண்மையில் திரிந்து - ஆணியல்பு திரிந்து, அருந்தொழில் திரியாது - தனது கொலைத் தொழிலின் வேறு படாது, நாண் உடைக் கோலத்து நகைமுகம் கோட்டி - நாணி னையுடைய கோலத்தையும் நகை பொருந்திய முகத்தையும் உண்டாக்கிக் கொண்டு, பண்மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி - திவவினையுடைய யாழின் நரம்புபோலப் பண்ணாகிய மொழியைப் பேசி, பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என - பெண்ணுருவோடு இங்கே திரியுந் தன்மையும் உண்டா யிற்றோ எனவும்,

       
கூற்றம் ஆணுருவோடு திரிந்து உயிர் பருகில் செங்கோலை மறுத்ததாகு மென்றஞ்சி ஆணுரு வொழிந்து பெண்ணுருவோடு தொழில் வேறுபடாது திரியும் பெற்றி யென்க. ஆண்மை - கடுத்த முகமும் இடித்த குரலும் முதலியவற்றோடு கூடிய ஆண் வடிவு. கோட்டி - வளைத்து என்றுமாம் ' . திவவு - யாழின் கோட்டிலுள்ள நரம்புக் கட்டு. யாழ் நரம்பின் மொழி மிழற்றி என மாறுக. பெண்மை - நாணுடைக் கோலமும் நகைமுகமும் பண்மொழி மிழற்றலுமுடைய பெண் வடிவு. உண்டுகொல் என இடைச்சொல் விரித்துரைக்க. கூற்றமே பெண்ணுருக் கொண்டு திரிந்த தென்றார்.

          1"பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
       
  பெண்டகையாற் பேரமர்க் கட்டு"

என்பது காண்க.


1 குறள், 109 : 3.