6. கடலாடு காதை

50

நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்



50
உரை
51

       மாக்கடல் நடுவண் - கரிய கடலின் நடுவே, நீர்த்திரை அரங்கத்து - நீரின் அலையே அரங்கமாக நின்று, நிகர்த்து முன் நின்ற சூர்த்திறம் கடந்தோன் - எதிர்த்து முன்னின்ற சூரனது வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்த முருகன், ஆடிய துடியும் - துடி கொட்டி யாடிய துடிக் கூத்தும் ;

       கடல் நடுவண் சூர்த்திறங் கடந்தோன் அரங்கத்து ஆடிய துடியென்க. திறம் - வேற்றுருவாகிய வஞ்சம்.