|
|
படைவீழ்த் தவுணர் பையு ளெய்தக்
குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும்
|
|
படை
வீழ்த்து அவுணர் பையுள் எய்த-அவுணர்கள் தாம் போர் செய்தற் கெடுத்த படைக்கலங்களைப்
போரிற் காற்றாது போகட்டு வருத்தமுற்ற வளவிலே, குடை வீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்
- அவர் முன்னே முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக வெழினியாக நின்று ஆடிய
குடைக்கூத்தும் ;
வீழ்த்தல் இரண்டனுள் முன்னது போகடுதல்
; பின்னது சாய்த்தல். முருகன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். |
|