6. கடலாடு காதை


55

வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்



54
உரை
55

       வாணன் பேரூர் மறுகிடை நடந்து - வாணாசுரனது சோ என்னும் நகர வீதியிற் சென்று, நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும் - நெடிய பூமியைத் தாவியளந்த மாயோன் குடங்கொண்டு ஆடிய குடக்கூத்தும் ;

       வாணன் தன் மகள் உழை காரணமாகக் காமன் மகன் அநிருத்தனைச் சிறை வைத்தலின் அவனை மீட்டற்பொருட்டு உலோகங்களாலும் மண்ணாலும் இயற்றிய குடங்களைக் கொண்டு மாயோன் ஆடின னென்க. இது விநோதக் கூத்து ஆறனுள் ஒன்று.