6. கடலாடு காதை


காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்



58
உரை
59

       காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள் - காயுஞ் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தாற் செய்யும் கொடுந் தொழிலைப் பொறாதவளாய், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் - துர்க்கை மரக்கால் கொண்டு ஆடிய மரக்காற் கூத்தும் ;

       மாயவள் - துர்க்கை. மரக்கால் - மரத்தாலாகிய கால். அவுணர் உண்மைப் போரால் வெல்லுத லாற்றாது வஞ்சப் போரால் வெல்லுதல் கருதி, பாம்பு தேள் முதலியனவாய்ப் புகுதலை யுணர்ந்து, அவள் அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால் கொண்டு ஆடினள் என்க.