6. கடலாடு காதை




பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையினும்
ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்



76
உரை
79

       பத்துத் துவரினும் - பத்து வகைப்பட்ட துவரினானும், ஐந்து விரையினும் - ஐந்து வகைப்பட்ட விரையினானும், முப்பத்திரு வகை ஓமாலிகையினும் - முப்பத்திரண்டு வகைப்பட்ட ஓமாலிகையானும், ஊறின நல் நீர் - ஊறிக் காயப்பட்ட நல்ல நீராலே, உரைத்த நெய் வாசம் - வாசநெய் தேய்த்த, நாறு இருங் கூந்தல் - மணங்கமழும் கரிய கூந்தலை, நலம் பெற ஆட்டி - நன்மை பெற ஆட்டி ;

       துவர் முதலியன அவற்றை யுடைய பொருளுக்காயின. வாச நெய் உரைத்த என மாறுக. இருமை - கருமை. துவர் முதலியவற்றைப் பின்வரும் மேற்கொள்களான் அறிக ;

       "பூவந்தி திரிபலை புணர்கருங் காலி, நாவ லோடு நாற்பான் மரமே." "கொட்டந் துருக்கந் தகர மகிலாரம், ஒட்டிய வைந்தும் விரை."

       "இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம், குலவி நாகணங் கொட்டம் - நிலவிய, நாக மதாவரிசி தக்கோல நன்னாரி வேகமில் வெண்கோட்ட மேவுசீர் - போகாத, கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டில்வெண்ணெய், ஒத்தகடு நெல்லி யுயர்தான்றி - துத்தமொடு, வண்ணக்கச் சோல மரேணுக மாஞ்சியுடன், எண்ணுஞ் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும், புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம் - பன்னும், பதுமுக நுண்ணேலம் பைங்கொடு வேரி, கதிர்நகையா யோமாலி கை" பிறவா றுரைப்பாரு முளர்..