மத்தக
மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் - முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில்
வயிரங்களழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும், செம் பொற் கைவளை - செம்பொன்னாற்
செய்த வளையும், பரியகம் - நவமணி வளையும், வால்வளை - சங்கவளையும் பவழப் பல்வளை
- பலவாகிய பவழ வளைகளும் என்னும் இவற்றை, அரிமயிர் முன் கைக்கு அமைவுற அணிந்து -
மெல்லிய மயிரையுடைய முன் கைக்குப் பொருத்தமுற அணிந்து ;
சூடகம் - கடகமும், பரியகம் - கைச்சரியும்,
வால்வளை - வெள்ளி வளையும் என்னலுமாம்.
|