வாளைப்
பகுவாய் வணக்குறு மோதிரம் - வாளைமீனின் அங்காந்த வாயை யொக்கும் முடக்கு மோதிரமும்,
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் - ஒளிமிக்க செந்நிறம் விளங்கு கின்ற
மாணிக்கம் பதித்த மோதிரமும், வாங்கு வில் வயிரத்து மர கதத் தாள்செறி - பக்கத்தே
வளைந்து திரையும் ஒளியையுடைய வயிரம் சூழ்ந்த மரகதமணித் தாள்செறியும் என்னும் இவற்றை,
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து - காந்தள் மலர்போலும் மெல்லிய விரல்கள் மறையும்படி
அணிந்து ;
வாளையின் அங்காந்த வாயை வணங்குதலுறுவிக்கும்
நெளியென்றுமாம். கேழ் - முன்னது ஒளியும், பின்னது நிறமுமாம். கிளர் மணி மோதிரம்
- இரத்தினங் கட்டின அடுக்காழியென்பது அரும்பதவுரை. வாங்கு வில் - வளைந்த விற்போல்
வளைந்து செல்லும் ஒளி. வாள்போன்ற ஒளி வாள் எனவும், விற்போன்ற ஒளி வில் எனவும்
பெயர் கூறப்படும் என்க. தாள் செறி - விரலடியிற் செறிப்பது.
|