6. கடலாடு காதை


100

சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை
அங்கழுத்து அகவயின் ஆரமோ டணிந்து



99
உரை
100

       சங்கிலி - வீரசங்கிலியும், நுண்தொடர் - நுண்ணிய சங்கிலியும், பூண்ஞாண் - பூணப்படும் சரடும், புனைவினை - புனையப்பட்ட தொழில்களையுடைய சவடி சரப்பளி முதலாயினவும் என்னும் இவற்றை, அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து - அழகிய கழுத்திடத்தே முத்தாரத்தோடு அணிந்து ;

       நுழைவினை நுண்ஞாண் என்று பாடங்கொண்டு, நுண்ணிய தொழிலையுடைய ஞாண் என்றுரைப்பர் அரும்பதவுரையாசிரியர். கழுத்தின் முன்னிடத்தே தாழ அணிந்தென்க.