6. கடலாடு காதை

130

கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பிற்
கூல மறுகிற் கொடியெடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென் றெய்தி



130
உரை
133

       கலம் தரு திருவின் - மரக்கலங்கள் தந்த செல்வத்தையுடைய, புலம் பெயர் மாக்கள் - தம் தேயங்களை விட்டுப் போந்த பரதேயத்தினர், வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில் கூல மறுகில் - கடலின் அலைவா யிருப்பில் வெண்மணலையுடைய கூல வீதியில், கொடி எடுத்து நுவலும் மாலைச்சேரி மருங்கு சென்று எய்தி - இன்ன சரக்கு ஈண்டுளதென்று கொடிகளெடுத்து அறிவிக்கும் ஒழுங்குபட்ட சேரிகளைக் கடந்து நெய்தலங்கானலை எய்தி ;

       வாலுகம் - வெண்மணல். வேலை விரிதிரைப் பரப்பில் வாலுகத்து மறுகு என்றியைக்க. எடுத்து - எடுத்தலால் என்க. நுவலுதல் - ஈண்டு அறிவித்தல். சரக்குக்களின் நன்மையை அறிவித்தலுமாம்.