விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் - விண்ணிலே சென்று பொருந்தும் பெரிய புகழையுடைய
கரிகாற் சோழன், தண்பதம் கொள்ளும் தலைநாட்போல - புதுப் புனல் விழவு கொண்டாடும்
தலைநாளிற்போல, வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை - வேறு வேறு கோலமும் வேறு வேறு
ஆரவாரமும், சாறு அயர்களத்தின் வீறுபெறத் தோன்றி- விழாச் செய்யும் களத்திற்போல
வீறுபெறத் தோன்றாநிற்க ;
பொரு - பொருந்தும். தண்பதங் கொள்ளும்
- புதுப்புனலாடும். தொகுதியின் கம்பலையும் எழினியின் கோலமும் தோன்ற வென எதிர்நிரனிறை.
தலைநாட்போல, களத்தின் என்னும் உவம மிரண்டும் முறையே காலம் பற்றியும் இடம் பற்றியும்
வந்தன. தோன்றி - தோன்றவெனத் திரிக்க.
|