திங்கள்
மாலை வெண்குடையான் சென்னி - மாலை யணிந்த நிறைமதி போலும் வெண் குடையை உடையவனாகிய
சோழன், செங்கோல் அது ஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் - செங்கோலைச் செலுத்திக்
கங்கையைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி - காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின்
வாழ்வாயாக ; கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் - அங்ஙனம் வெறா தொழிந்தது,
கயல் கண்ணாய் - கயலாகிய கண்ணையுடையாய், மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன்
வாழி காவேரி - காதலை யுடைய மங்கையின் பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன்
; வாழ்வாயாக ;
அது, பகுதிப்பொருள்
விகுதி. தன், அசை. வாழி - அசையுமாம். கங்கையைப் புணர்தலாவது வடக்கே கங்கையும்
அகப்பட ஆணை செல்ல நிற்றல். புலத்தல் - ஊடுதல்; வெறுத்தல். கயற்கண் - மகளிர்க்குக்
கயல்போலுங் கண் ; ஈண்டுக் கயலாகிய கண். மாதர் - காதல் ; மங்கையாகிய மாதர்
என்றுமாம். ஈண்டு முன்னிலைக்கண் வந்தது ; நினது கற்பு என்றபடி. பெருங் கற்பு என்றமையால்,
காவேரி பிறர் நெஞ்சு புகாதவளென்பதும் பெற்றாம்; புகுதல் - ஆளக் கருதுதல். காவேரி
- காவேரன் புதல்வி என்ப ;
1"தவாநீர்க்
காவிரிப் பாவைதன் றாதை
கவேரனாங் கிருந்த
கவேர வனமும்"
என்பது காண்க.
1
மணிமே, 3; 55-6.
|