7. கானல்வரி




115

[ 18 ]

கொடுங்கண் வலையால் உயிர்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும்
வடங்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்பிழவல் கண்டாய்.



114
உரை
117

         கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை - வளைந்த கண்களையுடைய வலையால் உயிர்களைக் கொல்வான் நின் தந்தை ; நெடுங்கண் வலையால் உயிர் கொல்வை மன் நீயும் - நீயும் நெடிய கண்ணாகிய வலையால் உயிரைக் கொல்லா நிற்பை ; வடம் கொள் முலையால் - முத்து வடத்தைத் தாங்கியுள்ள முலைகளால், மழை மின்னுப் போல நுடங்கி உகும் மெல் நுசுப்பு இழவல் கண்டாய் - மேகத்தின் மின்னினைப் போல் அசைந்து தளரும் மெல்லிய இடையை இழந்துவிடாதே ; கொடுங்கண் - கண்போன்றிருக்கும் வலையின் இடைவெளிகள். நெடுங்கண் வலை, உருவகம். வடமும் ஒரு பாரமென்றபடி. முலையால் இழவல் என்றியைக்க.

         நுடங்குமிளமென்னுசுப்பு எனவும் பாடம்.