7. கானல்வரி






125

[ 20 ]

பவள உலக்கை கையாற் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
குவளை யல்ல கொடிய கொடிய.



122
உரை
125

         பவள உலக்கை கையாற் பற்றி - பவளத்தாலாகிய உலக் கையைக் கையாற் பற்றி, தவள முத்தம் குறுவாள் செங்கண் - வெண்மையாகிய முத்துக்களைக் குற்றுபவளுடைய சிவந்த கண்கள், தவள முத்தம் குறுவாள் செங்கண் -, குவளை அல்ல கொடிய கொடிய - குவளை மலர்களல்ல ; அவை கொடியன கொடியன ;

         குறுதல் - இக் காலத்தே குற்றுதல் என வழங்குகிறது, முத்தை அரிசியாகப் பெய்து பவள உலக்கையாற் குறுவரெனச் செல்வச் சிறப்புக் கூறியவாறு. நிறம் பற்றிக் குவளை யென்ன வேண்டா, அவை கொடியன வென்க.