7. கானல்வரி




30




35

[ 3 ]

மன்னு மாலை வெண்குடையான்
    வளையாச் செங்கோ லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பென்
    றறிந்தேன் வாழி காவேரி.




29
உரை
36

         மன்னும் மாலை வெண்குடையான் - பெருமை பொருந்திய மாலை யணிந்த வெண்குடையை உடையவனாகிய சோழன், வளையாச் செங்கோல் அது ஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் - என்றும் வளைதல் இல்லாத செங்கோலைச் செலுத்திக் குமரியைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி - காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக ; கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் -- அங்ஙனம் வெறா தொழிந்தது, கயற் கண்ணாய் - கயலாகிய கண்ணையுடையாய், மன்னும் மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி - மாதரது நிலை பெற்ற பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன் ; வாழ்வாயாக ;

அதிகாரத்தானும், காவேரி கூறினமையானும் வெண்குடையான் சோழனாயிற்று. வளையா என அடையடுத்தமையால் செங்கோல் கோலென்னு மாத்திரையாயிற்று எனலுமாம் ; 1"கோடாத செங்கோல்" என்பதன் உரை நோக்குக. கன்னி - குமரியாறு. கன்னியைப் புணர்தலாவது குமரியும் உட்படத் தெற்கே தன் ஆணை செல்ல நிற்றல். மேலிற் செய்யுளுரையில் உரைத்தன பிறவும் ஈண்டுத் தந்துரைக்க.


.1 சீவக. 7.