7. கானல்வரி

[ 21 ]

புன்னை நீழற் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய கூற்றங் கூற்றம்.



126
உரை
129

         புன்னை நீழல் - புன்னை மரத்தின் நீழலில், புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - புலால் நாறும் அலையின்மீதே அன்னப் பறவை நடக்கும்படி நடப்பவளுடைய சிவந்த கண்கள், அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் -, கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் - மிகவும் கொடியன ; ஆதலால் அவை கூற்றமே யாகும் ;

         அன்னம் இந் நடையைப் பார்த்து நடக்கும்படி நடப்பாளென்க; அன்றி, நடைக்கு அஞ்சி யோட என்றுமாம். நீழலில் நடப்பாள் என வியையும். கொன் - மிகுதி.