7. கானல்வரி



130

[ 22 ]

கள்வாய் நீலங் கையி னேந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.



130
உரை
133

         கள் வாய் நீலம் கையின் ஏந்தி - தேனை வாயினிடத்துடைய நீலப் பூவைக் கையிலே ஏந்திக்கொண்டு, புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் - உணங்கலிடத்துப் பறவையை ஓட்டுபவளுடைய சிவந்த கண்கள், புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் -, வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய - வெள்ளிய வேல்கள் அல்ல ; மிகவும் கொடியனவே யாகும்;

         உணங்கல்வாய்ப் புள் என மாறுக. உணங்கல் - மீன் வற்றல். வெள் வேல்- மாற்றாரை யெறிந்து குருதிக் கறை பற்றாத வேல், வடிவு பற்றி வெள் வேல் என்ன வேண்டா ; இவை மிகக் கொடியன என்க. இப் பாட்டுகளில் நெய்தற் கருப்பொருளே வந்திருத்தல் காண்க. இவை கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன.

         இவை மூன்றும் குறியிடத்துக் கண்ட பாங்கன் சொல்லியவை ; புணர்ந்து நீங்குவான் விடுத்தலருமையால் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியவையுமாம்.