சேரல்
மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - மடப்பத்தையுடைய அன்னமே (விளையாட்டு விருப்பினால்
ஓடுவாளைக் கண்டு இவள் நடை உனது நடை போலும் என்று புலவர் சொல்வாராயினும், இவள்
விளையாட்டொழிந்து இயல்பாக நடக்குமிடத்து) இவள் நடையை உனது நடை ஒவ்வாது, ஆதலால்
இவள் பின்னே செல்லாதிருக்கக் கடவை ; செல்லா திருக்கக்கடவை; ஊர் திரை நீர் வேலி
உழக்கித் திரிவாள் பின்பரக்கின்ற அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்திலுள்ளாரை
வென்று திரிபவள் பின்னே, சேரல் ..... ஒவ்வாய் - நடை யொவ்வாயாதலால் அன்னமே
செல்லாதிருக்கக் கடவை ;
நீர்வேலி - நெய்தனிலமுமாம்.
ஊர்திரை நீரோத முழக்கி என்பது பாடமாயின், கழியின் நீரைக் கலக்கி யென்க. இதுவும்
கந்தருவமார்க்கத்தால் அடிமடக்கி வந்தது.
இது, காமஞ் சாலா இளமையோள்வயின்
ஏமஞ்சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது.
' 'கடல்புக் குயிர்கொன்று''
என்பது முதலிய ஏழும் திணை நிலைவரி.
|