மருங்கு
வண்டு சிறந்து ஆர்ப்ப - இருபக்கத்தும் வண்டுகள் மிக்கொலிக்க, மணிப் பூ ஆடை அது
போர்த்து - அழகிய பூவாடையைப் போர்த்து, கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய்
- கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாயாகலால், வாழி காவேரி - காவேரி நீ வாழ்வாயாக
; கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தவெல்லாம் - அங்ஙனம் நடந்த செயலெல்லாம்,
நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் - நின் கணவனது திருந்திய செங்கோல்
வளையாமையே; அதனை அறிந்தேன் ; வாழ்வாயாக ;
மருங்கு - ஆற்றின் இருபக்கம், இருபக்கத்தும் தொங்குகின்ற கை. வண்டு - வண்டு, வளையல்.
பூ ஆடை - பூவாகிய ஆடை, பூத்தொழிலமைந்த ஆடை. கயற்கண் - கயலாகிய கண், கயல் போலுங்
கண். காவேரியை ஒரு பெண்ணாகக் கொண்டு, அதற்கேற்பச் சிலேடை வகையாற் கூறினார்.
கணவன் என்றது சோழனை. வளையாமையே என்னும் தேற்றேகாரம் தொக்கது. யான் அதனை அறிந்தேன்
என முடிக்க.
|