7. கானல்வரி





150

[ 26 ]

பூவர்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி
காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி.



148
உரை
151

         பூ ஆர் சோலை மயில் ஆல - பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் ஆடவும், புரிந்து குயில்கள் இசை பாட - குயில்கள் விரும்பி இசை பாடவும், காமர் மாலை அருகு அசைய - விருப்பம் பொருந்திய மாலைகள் அருகில் அசையவும், நடந்தாய் வாழி காவேரி - நடந்தாயாகலாற் காவேரி நீ வாழ்வாயாக ; காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் - நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் நாம வேலின் திறம் கண்டே - நின் கணவனது அச்சத்தைச் செய்யும் வேலின் றன்மையைக் கண்டே; அறிந்தேன் வாழி காவேரி - யான் அதனை அறிந்தேன் ; வாழ்வாயாக;

         பூவர், ஆர்நெடில் குறுகியது. மாலை - புதுப்புனலாடுவார் அணிந்தவை. நாம் என்னும் உரிச்சொல் ஈறு திருந்தது ; நாமம் - புகழ் என்று முரைப்பர். வேலின் றிறங் கண்டே என்றது பிறரால் வருத்தமில்லை யென்றபடி.