7. கானல்வரி






155

[ 27 ]

வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி.



152
உரை
155

         வாழி அவன்றன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி - நின் கணவனது வள நாடு மகவாக நீ அதனை வளர்க்கும் தாயாகி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி - ஊழி தோறும் நடத்தும் பேருதவி நீங்காயாகலால் காவேரி நீ வாழ்வாயாக ; ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் - நீ அங்ஙனம் நீங்காது ஒழுகுதல். உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே வாழி காவேரி - உயிர்களைப் பாதுகாக்கும் சக்கரவர்த்தியாகிய நடுவுநிலைமை யுடையவனது அருளே ; வாழ்வாயாக;

         முதற்கண் வாழி - அசை. வளநாடு - சோழநாடு. மகவாக வெனத் திரிக்க. ஊழி உய்க்கும் - முறையில் நடத்தும் என்றுமாம். ஆழி ஆள்வான் - ஆழியை ஆள்பவன் ; ஆழியால் ஆள்பவன் என்றுமாம். ஆழி - ஆக்கினைச் சக்கரம். பகல் - நடுவுநிலை. வெய்யோன் - விரும்புபவன்.

         மூன்று பாட்டிலும் நடந்தாய் முதலியவற்றை ஏதுவாக்காமல் முற்றாக்கி, வாழி - அசையென்றலுமாய். வளையாமை, அருளே என்பன காரணம் காரியமான உபசார வழக்கு. இவை மூன்றும் ஆற்று வரி.