7. கானல்வரி




165




170

[ 29 ]

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து
                      மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனமயாங்
                      கறிகோ மைய
நிறைமதியு மீனும் என அன்னம் நீள்புன்னை
                      அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்ப லூதும்
                      புகாரே எம்மூர்.



164
உரை
171

         மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து - வன்மையுடைய பரதர்களின் பாக்கத்தில் களவிற் கூடிய மகளிரை, மடவார் செங்கை இறை வளைகள் தூற்றுவதை - அம் மகளிரது சிவந்த கையின் இறையிலுள்ள வளைகள் கழன்று தூற்றுவதை, ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய யாங்கள் எங்ஙனம் அறியாநிற்பேம் ; நிறை மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த பொறை மலி பூங்கொம்பு ஏற - அன்னமானது நீண்ட புன்னையினது அரும்பிப் பூத்த பூக்களின் பாரம் மிக்க கொம்பினிடத்தில் ஏறியிருப்ப அவ் வன்னத்தையும் பூக்களையும் நிறைமதியும் மீன் கணமுமெனக் கருதி, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம்மூர் - வண்டு ஆம்பல் மலரை ஊதாநிற்கும் புகாரே எம்முடைய ஊராகும் ;

        அம் மடவார் எனச் சுட்டு வருவிக்க. களவிற் புணர்ச்சி நிகழ்த்திப் பிரிந்து சென்ற தலைவர் வரவு நீட்டித்தலின் தலைமகள் கை வளைகள் கழன்று களவினை வெளிப்படுத்தலாயின வென்க. மணந்த தலைவரைத் தூற்றுவதை யென்றுமாம். தூற்றுதல் - பலருமறியப் பரப்புதல். யாங்கு, ஆங்கு என்பதுபோல் அசை. அன்னம் கொம்பு ஏற அதனையும் பூக்களையும் மதியும் மீனுமாகக் கருதி என இயைக்க ; நிரனிறை. வண்டூதும் என்றமையால் ஆம்பல் மலர்தல் பெற்றாம். மதியும் மீனுமென ஆம்பல் மலர அதன்கண் வண் டூதும் என்க.