தபுள்
இயல் மான் தேர் ஆழி போன வழி எல்லாம் - பறவையின் இயல்பையுடைய குதிரை பூட்டிய
தேரின் உருளை சென்ற வழி முழுதையும், தெள்ளு நீர் ஓதம் - தெளிந்த நீரையுடைய கடலே,
சிதைத்தாய் மற்று என் செய்கோ - அழித்தாய்; யான் என்செய்வேன், தெள்ளு நீர்
ஓதம் சிதைத்தாய் மற்று - அங்ஙனம் சிதைத்த நீ, எம்மொடு ஈங்கு உள்ளாரோடு உள்ளாய்
- எம்மொடு இங்கிருந்து அலர் தூற்றும் அயலாரோடு உள்ளாயாதலால், உணராய் - எனது நோயினை
அறியாய், மற்று என் செய்கோ - யான் என் செய்வேன் ;
புள்ளினைப்போற் பறக்கு
மியல்பினதென அதன் கடுமை கூறுவார், புள்ளியல்மான் என்றார் ; 1"புள்ளியற்
கலிமா வுடைமை யான" என்றார் தொல்காப்பியனாரும். தெள்ளு நீர் - கொழிக்கின்ற
நீருமாம். ஓதம் - வெள்ளமும் அலையுமாம் ; அண்மைவிளி. எம்மொடீங்குள்ளார் - எம்
மனம் விட்டு நீங்காத தலைவரென்றுமாம். என் செய்கு - என் செய்வேன் ; தனித்தன்மை.
மற்றும், ஓவும் அசைகள்.
1.
தொல், பொருள். 164.
|