7. கானல்வரி




205




210

[ 37 ]

நன்னித் திலத்தின் பூண் அணிந்து நலஞ்சார் பவளக்
                      கலையுடுத்துச்
செந்நெற் பழனக் கழனிதொறுந் திரையு லாவு
                      கடற்சேர்ப்ப
புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த
                      புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறைத்தால் அன்னை காணின்
                      என்செய்கோ.



204
உரை
211

         நல் நித்திலத்தின் பூண் அணிந்து - நல்ல முத்தாகிய பூணினை யணிந்து, நலம் சார் பவளக் கலை உடுத்து - நன்மை பொருந்திய பவளமாகிய மேகலையை உடுத்து, செந்நெற் பழனக் கழனிதொறும் - செந்நெற் பயிர்களையுடைய மருதநிலத்துக் கழனிதொறும், திரை உலாவு கடற் சேர்ப்ப - அலைகள் உலாவுகின்ற கடலின் கரையையுடைய தலைவனே, புன்னைப் பொதும்பர் - புன்னை மரம் அடர்ந்த சோலையிலே, மகரத் திண் கொடி யோன் எய்த புதுப் புண்கள் - வலிய மகரக் கொடியையுடைய மன்மதன் அம்பெய்தமையாலான புதிய புண்கள், என்னைக் காணா வகை மறைத்தால் - என் னுருவினைக் காணாதபடி மறைப்பின், அன்னை காணின் என் செய்கோ - அதனைத் தாய் அறியின் என் செய்வேன் ;

         நித்திலத்தின் பூண், பவளக்கலை என்பன வேற்றுமைத் தொகையும் பண்புத்தொகையுமாம். பழனம் - மருதம், நீர்நிலை. பொதும்பர் - மரச்செறிவு. புதுப்புண் என்றது தலைவி மேன் மேல் வருந்துகின்ற வருத்தத்தை. பொதும்பர் தாதினை யுதிர்த்துப் புண்களை மறைத்தால் என்றுரைப்பாருமுளர்.