புலவுற்று இரங்கி - புலால் நாற்றம் பொருந்தி முழங்கி, அது நீங்க - அப் புலால்
நீங்க, பொழியிற் றண்டலையில் புகுந்து - பொழிலாகிய சோலையிலே புகுந்து, உதிர்ந்த
கலவைச் செம்மல் மணம் கமழ - ஆண்டு உதிர்ந்த பலவுங் கலந்த பழம்பூக்களின் மணம்
கமழ, திரை உலாவு கடற் சேர்ப்ப - அலையுலாவுகின்ற கடற் கரையை யுடையவனே, பல உற்று
ஒரு நோய் துணியாத படர் நோய் - பல துன்பங்களும் உறுதலால் இன்னதொரு நோயெனத் துணியலாகாத
படர் நோயை, மடவாள் தனி உழப்ப - தலைவி தானே யறிந்து அநுபவிக்க, அலவுற்று இரங்கி
அறியா நோய் - மெலிதலும் இரங்கலும் புலப்படாமையின் ஒருவராலும் அறியப்படாத அந்
நோயை, அன்னை அறியின் என் செய்கோ - தாய் அறிந்தால் யாது செய்வேன் ;
புலவுற்றிரங்கி - புலத்தலுற்று
வருந்தி என்ற பொருளும் தோன்ற நின்றது. நீங்க மணங் கமழப் புகுந்து உலாவு கடல் என்க.
கலவை - பலவகையும் கலந்தது. செம்மல் - பழம்பூ.
இவை மூன்றும் அலர் அறிவுறீஇ வரைவு கடாவியவை.
|