இளை இருள் பரந்ததுவே - இளைய இருள் விரிந்தது, எல் செய்வான் மறைந்தனனே
- பகலினைச் செய்யும் ஆதித்தன் மறைந்தனன், களைவு அரும் புலம்பு நீர் கண்பொழீஇ
உகுத்தன - களைதற்கரிய தனிமை வருத்தத்தாலாய நீரினைக் கண்கள் மிகுதியாகச் சொரிந்தன,
தளை அவிழ் மலர்க் குழலாய் - முறுக்கு விரிந்த மலரணிந்த கூந்தலையுடையாய், தணந்தார்
நாட்டு உளதாங் கொல் - நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டிலும் இருக்குமோ, வளை நெகிழ
எரி சிந்தி வந்த இம் மருள் மாலை - நம்முடைய வளை கழல நெருப்பினைச் சிந்தி வந்த
இந்த மயக்கத்தையுடைய மாலைப்பொழுது ;
இளை - இளைய ; விகாரம். ஏகாரங்கள்
ஈண்டு இரங்கல் குறித்தன. புலம்பு - தனிமை ; வருத்தம். மருள் மாலை - மயங்கிய மாலை
; மயக்கத்தைச் செய்யும் மாலையுமாம். மாலை உளதாங்கொல் என வியையும். கொல் -
ஐயம். தலைவர்நாட் டிருக்குமாயின் அவர் இங்ஙனம் பிரிந்திரார் என்பது குறிப்பு.
|