பறவை பாட்டு அடங்கினவே - பறவைகள் ஒலித்தலடங்கின, பகல் செய்வான் மறைந்தனனே
- சூரியன் மறைந்தான், நிறை நிலா நோய் கூர நெடுங்கண் நீர் உகுத்தன - நிறுத்த நில்லாவாய்
நோய்கள் மிகாநிற்க நெடிய கண்கள் நீரைச் சொரிந்தன, துறுமலர் அவிழ் குழலாய் -
அவிழ்ந்த மலர்கள் நெருங்கிய கூந்தலையுடையாய், துறந்தார் நாட்டு உளதாங்கொல் -
நம்மைப் பிரிந்த தலைவரது நாட்டிலும் உண்டாகா நிற்குமோ, மறவையாய் என் உயிர்மேல்
வந்த இம் மருள் மாலை - மறத்தினையுடையதாய் என் உயிரின்மேல் வந்த இந்த மயங்கிய
மாலைப் பொழுது ;
பாட்டு - பாடுதல்; ஒலித்தல்.
நிறை - நிறுத்தல். நிலா - நில்லா வாய்; எச்சமுற்று. துறு - நெருங்கிய. மறவை - மறத்தை
யுடையது. உயிர்மேற் பாய்ந்து வந்த மாலையாகிய புலியென்க.
இவை மூன்றும் பொழுது கண்டு ஆற்றாளாய
தலைமகள் தோழிக்குரைத்தன.
இவை ஆறும் மயங்கு திணை நிலைவரி.
இவற்றுள் திணை மயங்கியுள்ளமை காண்க.
|