7. கானல்வரி



240

[ 43 ]

கைதை வேலிக் கழிவாய் வந்தெம்
பொய்தல் அழித்துப் போனா ரொருவர்
பொய்தல் அழித்துப் போனா ரவர்நம்
மையல் மனம்விட் டகல்வா ரல்லர்.



240
உரை
243

         கைதை வேலிக் கழிவாய் வந்து - தாழையை வேலியாக வுடைய இக் கழியின்பால் வந்து, எம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர் - நம்முடைய விளையாட்டை மறப்பித்துச் சென்றார் ஒருவர், பொய்தல் அழித்துப் போனார் அவர் - அங்ஙனம் விளையாட்டை மறப்பித்துச் சென்ற அவர், நம் மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் - நமது மயக்கத்தையுடைய மனத்தை விட்டு நீங்குவாரல்லர் ;

         கழி - கடல் சார்ந்த நிலமும் நீரோடையும். பொய்தல் - மகளிர் விளையாட்டு. அழித்தல் - ஈண்டு மறப்பித்தல் ; 1"சேர்ப்பே ரீரளை யலவற் பார்க்குஞ், சிறுவிளை யாடலு மழுங்க, நினைக்குறு பெருந்துயர மாகிய நோயே" என்பதிற்போல.


1 நற். 123.