7. கானல்வரி





250

[ 45 ]

அன்னந் துணையோ டாடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றா ரொருவர்
நென்னல் நோக்கி நின்றா ரவர்நம்
பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்.




248
உரை
251

         அன்னம் துணையோடு ஆடக் கண்டு - அன்னப் பறவை தன் துணையுடன் விளையாடக் கண்டு, நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் - நேற்று அதனையே நோக்கி நின்றார் ஒருவர், நென்னல் நோக்கி நின்றார் அவர் - அங்ஙனம் நோக்கி நின்ற அவர், நம் பொன் நேர் சுணங்கிற் போவார் அல்லர் - நமது பொன்னை யொத்த சுணங்கு போல நம்மை விட்டு நீங்குவாரல்லர் ;

         நென்னல் - நெருநல் என்பதன் மரூஉ. நோக்கி - என்னை நோக்கி யென்றுமாம். சுணங்கு - தேமல். அழகிய சுணங்குமாம்.

         இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் ; ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற் பழிக்கத் தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம். இவை சாயல்வரி என்பர்.