நுளையர் விளரி நொடிதரும் தீம்பாலை - நுளையரது விளரிப் பாலையாகிய பண்ணினைப்
பாடுங்கால், இளி கிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை-மாலைப் பொழுதே, இளி யென்னும்
நரம்பு கைக்கிளை யென்னும் நரம்பிற் சென்று மயங்க வந்து தங்கினாய், இளி கிளையிற்
கொள்ள இறுத்தாய் மன் நீயேல் - அங்ஙனம் தங்கினாய் நீ யாயின், கொளை வல்லாய்
என் ஆவி கொள் வாழி மாலை - கொள்ளுதலில் வல்லாயாகிய மாலையே நீ என் உயிரைக்
கொள்வாயாக ;
விளரிப்பாலை - இரங்கற்பண் ;
நெய்தற்குரியதாகலின் நுளையர் விளரி யென்றார். நொடிதருதல் - சொல்லுதல். நின்ற
நரம்பிற்கு ஆறாம் நரம்பு பகை ; அது கூடம் என்னுங் குற்றம் ; இளி முதலாகக் கைக்கிளை
ஆறாவதாகலின் இளிக்குக் கைக்கிளை பகை. மயக்கத்தாலே பகை நரம்பிலே கை சென்று தடவவென்க.
கொளை வல்லாய் - உயிரைக் கொள்ளுதலை வல்லாய். வாழியென்றது குறிப்பு.
|