காதலர்ஆகிக்
கழிக்கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் - காதலை யுடையராகிக் கடற்கரைச்
சோலையிடத்தே அன்று கையுறைகொண்டு எமது பின்னே வந்தவர், ஏதிலர் தாம் ஆகி யாம்
இரப்ப நிற்பதை - இன்று தாம் நொதுமலராகி யாம் இரக்கும் வண்ணம் நிற்கின்றார்
; அங்ஙனம் நிற்றலை, யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய யாம் எங்ஙனம் அறிவோம்;
மாதரார் கண்ணும் - மகளிருடைய முகத்திலுள்ள கண்ணையும், மதிநிழல் நீர் இணைகொண்டு
மலர்ந்த நீலப் போதும் - நீரிலே தோன்றும் மதியினது சாயலில் இணையாக மலர்ந்த
நீல மலரையும், அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் - அறியமாட்டாது வண்டுகள் ஊசலாடும்
காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;
கையுறை - காணிக்கை. பின்பு யாம் இரப்ப என்பதனால் முன்பு தாம் இரந்தவர் என்று கொள்க.
நிற்கின்றார் ; அங்ஙனம் நிற்றலை என அறுத்துரைக்க. அன்று காதலராகிக் கையுறை கொண்டு
எமது பின்னே தொடர்ந்து வந்து இரந்தவர் இன்று யாம் இரக்கும் வண்ணம் ஏதிலராகி நிற்கின்றார்
; இஃதென்னே! என்ற படி. ஈண்டும் முன்னிலைப் படர்க்கை. ஏழையம் என்பதனை ஈண்டும்
கூட்டுக. மதிநிழல் என்றதற்கேற்ப முகம் என்பது வருவிக்கப் பட்டது. தேன் உண்ண வந்த
வண்டு இது நீலமலர், இது கண் என அறியமாட்டாது மயங்கித் திரியும் என்றார். ஊசலாடுதல்
- அங்கு மிங்கும் அலைதல்; இலக்கணைப் பொருள்.
|