7. கானல்வரி






275

[ 51 ]

தீத்துழைஇ வந்தஇச் செல்லன் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால்
பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்.


272
உரை
275

        தீத் துழைஇ வந்த இச் செல்லல் மருள் மாலை - தீயைப் பரப்பி வந்த வருத்தத்தைச் செய்யும் இம் மயங்கிய மாலைப் பொழுது, தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால் - நம்மை வருத்துமென்று கருதாது நாம் துணியும்படி யுரைத்த இந் நன்மொழியோடே, பூக் கமழ் கானலிற் பொய்ச் சூள் பொறுக்கென்று - பூ நாறுஞ் சோலையிடத்தே கூறிய பொய்யாகிய சூளுரையைப் பொறுப்பாயாக வென்று, மாக் கடற்றெய்வம் - பெரிய கடற் றெய்வமே, நின் மலர் அடி வணங்கு தும் - நினது மலர் போலும் அடியை வணங்குவேம் ;

        துயரெஞ்சு கிளவி - துயரில்லாத மொழி ; நன்மொழி ; ஆவது நின்னிற் பிரியேனென்றல். கிளவியோடே கானலிற் கூறிய பொய்ச் சூளென்க. பொய்ச் சூளால் அவரைத் தெய்வம் ஒறுக்குமென அஞ்சிப் பொறுக்கென்று வணங்குதும் என்றாள். பொறுக்கென்று - அகரந் தொக்கது.

        இது, வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகன் சிறைப்புறத் தானாகக் கூறியது.

        இவை முகமில் வரி என்பர்.