துறைமேய்
வலம்புரி - கடலின் துறையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள், தோய்ந்து மணல் உழுத
தோற்றம் மாய் வான் - மணலிலே தோய்ந்து உழுத வடுக்கள் மறையும்படி, பொறை மலி பூம்
புன்னைப் பூ உதிர்ந்து - அழகிய புன்னை மரத்தின் நிறைந்த பாரமாகிய பூக்கள் உதிர்ந்து,
நுண் தாது போர்க்கும் கானல் - அவற்றின் நுண்ணிய பூந்துகள் மறைக்கும் கானலிடத்தே,
நிறைமதி வாண்முகத்து நேர் கயற் கண் செய்த - இவளது நிறைமதி போலும் ஒள்ளிய முகத்திலுள்ள
கயலை யொத்த கண்கள் செய்த, உறை மலி உய்யா நோய் - மருந்தாற் போக்க முடியாத
நிறைந்த நோயினை, ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் - சுணங்கு பரந்த மெல்லிய
முலைகளே போக்கும் போலும்;
மாய்வான் - மறைய;
வினையெச்சம், மாய்வான் தாது போர்க்குங் கானல் என்றியையும். கயல் நேர் கண்,
சுணங்கு ஊர் முலை, உறை உய்யா மலி நோய் என மாறுக. உறை - மருந்து. உய்யா - போக்க
முடியாத. மலி உறை என்னலுமாம். போலும் - ஒப்பில் போலி.
இது, குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதன் மிகுதி குறிப்பினானறிந்து கூறியது.
|