நிணம்
கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக் கீடுஆக - நிணம் பொருந்திய புலால்
வற்றல் புலர்வதன் பாங்கர் நின்று புள்ளினை ஓட்டுதல் காரணமாக, கணம் கொள்வண்டு
ஆர்த்து உலாம் கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி - கூட்டமாகிய வண்டுகள் முரன்று திரியும்
கன்னியாகிய நறிய ஞாழலின் பூங்கொத்தைக் கையில் ஏந்தி, மணம் கமழ் பூங்கானல்
மன்னி - மணம் நாறுகின்ற பூக்களையுடைய கானலிடத்துப் பொருந்தி, மற்று ஆண்டு ஒர் அணங்கு
உறையும் என்பது அறியேன் - ஓர் தெய்வம் உறையுமென்பதை அறியேன், அறிவேனேல் அடையேன்
மன்னோ - அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன் ;
புள் - உணங்கலைக் கவர வரும் பறவை. தலைக்கீடு - போலிக் காரணம் ; இதனை வியாசம்
என்ப. கன்னி - இளமை ; உயர்திணைக்குரிய கன்னியென்னுஞ்சொல் அஃறிணை யடுத்துவருவதனை
1"ஒரு வரைக் கூறும் பன்மைக்
கிளவியும், ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும், வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி,
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல" என்னுஞ் சூத்திரத்து, ஒன்றென முடித்தல் என்பதனால்
அமைப்பர். ஞாழல் - புலிநகக்கொன்றை. அணங்கு - வருத்துந் தெய்வம். கானலில் உறையுமென்பதறியேன்
என்றும், அறிவேனேல் ஆண்டு அடையேன் என்றும் கொண்டு கூட்டுக. மற்று, மன், ஓ - அசைகள்.
மன் - கழிவுமாம். இது கழற்றெதிர்மறை; இயலிடங்கூறலுமாம்.
1
தொல், சொல் 27. (உரை - சே. ந.)
|