கனகமாலையார் இலம்பகம் |
1013 |
|
|
|
(இ - ள்.) அழகர் அவர் - அழகராய அந் நால்வரும்; ஆண்டு ஐயர் உறை பள்ளியிடம் காண - ஆங்கே முனிவர் வாழும் பள்ளியிடத்தைக் காண்டற்கு; செய்கழலர் தாரர் எங்கும் திரிகின்றார் - கழலுடனும் தாருடனும் எங்கும் உலாவுகின்றவர்; கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிரும் மரப்பலகை - பறிக்குந்தகவினை தாய் உள்ள மலர்ப் பொதும்பரில் இருக்கும் மரப்பலகையிலே; செய்யவளின் சிறிது மிகை சேயவளைக் கண்டார் - திருமகளினும் சிறிது மிகுதியாக உயர்ந்தவளைக் கண்டனர்.
|
(வி - ம்.) விசையையைக் கண்டனர். குளிரும் : திசைச் சொல். 'மலர்ப்பலகை' என்றும் பாடம்.
|
( 226 ) |
1783 |
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்தச் | |
|
செந்நுண்டுகி லுத்தரியம் புதைந்துசுவல் வருத்த | |
|
மைந்நுண்குழற் சிறுவன்மனம் வருத்தவடி வேற்கண் | |
|
கைந்நொண்டன கவர்ச்சிநனி வருத்தக்கலுழ்ந் தாற்றாள். | |
|
ஐயருறை பள்ளியிட மாண்டழகர் காணச் | |
|
செய்கழலர் தாரரவ ரெங்குந்திரி கின்றார் | |
|
கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிருமரப் பலகைச் | |
|
செய்யவளிற் சிறிதுமிகை சேயவளைக் கண்டார். | |
|
(இ - ள்.) அம் நுண்துகில் அரத்தம்கல் அல்குலது வருத்த - அழகிய நுண்ணிய துகிலில் தோய்த்த அரத்தம் போலச் சிவந்த கல் அல்குலாகிய அதனை வருத்துதலானும்; செம்நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த - சிவந்த நுண்ணிய துகிலாகிய மேலாடை அழுந்தித் தோளை வருத்துதலானும்; மைநுண் குழல் சிறுவன் மனம் வருத்த - கரிய நுண்ணிய குழலையுடைய சீவகன் மனத்தை வருத்துதலானும்; வடிவேல் கண் கை நொண்டன கவற்சி - கூரிய வேலனைய கண்கள் (அரசனை யிழக்கும்படி நிகழ்த்தின) ஒழுக்கத்தாலே முகந்து கொண்டனவாகிய கவலை; நனி வருத்த - மிகவும் வருத்தலானும்; கலுழ்ந்து ஆற்றாள் - அழுதழுது ஆற்றாதவள்.
|
(வி - ம்.) அரத்தம் போலும் நிறமுடைய கல் அல்குலது என்புழி அது பகுதிப் பொருளது எனினுமாம். உத்தரியம் - மேலாடை. சுவல் - தோள். மை - கருமை. சிறுவன் : சீவகன். கை - ஒழுக்கம். கவற்சி - கவலை, கலுழ்ந்து - அழுது.
|
( 227 ) |
1784 |
மாசொடுமி டைந்துமணி நூற்றனைய வைம்பால் | |
|
பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறந் தாழ | |
|
வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித் | |
|
தோசமறத் துதிகண்மனத் தோதித்தொழு திருந்தாள். | |
|