| கனகமாலையார் இலம்பகம் |
1041 |
|
|
|
(இ - ள்.) வனை கலத் திகிரியும் - மண் கலன்களை வரையும் திகிரியும்; வாழ் உயிர்மேல் செலும் கனைகடுங் கதழ் பரிக் கால சக்கரமும்போல - வாழும் உயிரை வவ்வச் செல்லும் மிகவுங் கடிதாகிய மிக்க செலவினையுடைய கூற்றுவன் ஆழியும் போல; வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும் இனையவை - தொழிற்குத் தக்க வட்டமும் வீதியும் பத்தியுமாகிய இத் தன்மையவற்றை; ஏம் உற இமைப்பினின் இயற்றினான் - தப்பாதபடியே ஒரு நொடியிலே நடத்தினான்.
|
|
(வி - ம்.) கலம் வனைதிகிரி என்க. வாழுயிர் : வினைத்தொகை. கதழ்பரி - விரைந்த செலவினையுடைய. வட்டம், வீதி, பத்தி என்பன யானையின் செலவு வகை.
|
( 283 ) |
| 1840 |
ஒருவனே களிறுமொன் றோருநூ றாயிரந் | |
| |
திரிவவே போன்றன திசையெலாங் குஞ்சரக் | |
| |
குரியவன் னிவனலா லுலகினில் லிலனென | |
| |
வரிதுணர் வேத்தவை யமைகமற் றென்றதெ. | |
| |
விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை | |
| |
யடுகணை சிதறினா ரார்த்த வால்வளை | |
| |
கடுகின காலிய லிவுளி காண்டலு | |
| |
முடுகுபு கோவலர் முந்து காற்பெய்தார். | |
|
|
(இ - ள்.) ஒருவனே களிறும் ஒன்று - நடத்துவோனும் ஒருவனே, களிறும் ஒன்றேயாக இருக்கவும்; திசையெலாம் நூறாயிரம் திரிவவே போன்றன - ஏறினபடி திசையெல்லாம் எண் இறந்த யானை திரிவனபோலே இருந்தன; -குஞ்சரக்கு உரியவன் உலகினில் இவன் அலால் இலன் என - (ஆதலால்) யானையேற்றத்திற்குரியவன் உலகிலே இவன் அல்லது மற்றொருவன் இலன் என்று கூறி; அரிது உணர் வேத்தவை அமைக என்றது - அரிதென்று உணர்ந்த அரசவை அமைக என விலக்கியது.
|
|
(வி - ம்.) ஓரும், மற்று : அசைகள்.
|
|
களிறும் ஒன்று அதனை ஊருவோனும் ஒருவனே என்க. நூறாயிரம் என்றது மிகுதிக்கோர் எண் கூறியவாறு. குஞ்சரக்கு - குஞ்சரத்திற்கு. சாரியையின்றி உருபு புணர்ந்தது.
|
( 284 ) |
| 1841 |
வள்ளுகிர் நுதியினால் வரிநுத லுறுத்தலு | |
| |
முள்ளுணர் குஞ்சரம் ஓய்யென நிற்றலு | |
| |
மௌ்ளரும் மிருமணி கிணினென விசைத்தன | |
| |
வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்துகை விதிர்த்ததே. | |
| |
அளைச்செறி யிரும்புலி யனைய வாடவர் | |
| |
வளைத்தனர் மணிநிரை வன்க ணாயரும் | |
| |
விளைத்தனர் வெருவரத் தக்க வெஞ்சொலா | |
| |
லுளைத்தனர் பூசல்விட் டுணர்த்த வோடினார். | |
|
|
(இ - ள்.) வள் உகிர் நுதியினால் - தோட்டி நுனியென்னும் உகிர் நுனியினால்; வரி நுதல் ஊறுத்தலும் - வரியையுடைய நெற்றியிலே அழுத்தின அளவில்; உள் உணர் குஞ்சரம் - இவன் மனம் உணர்ந்த யானை; ஒய்யென நிற்றலும் - கடுக நின்ற அளவிலே; எள் அரும் இரு மணி கிணின் என இசைத்தன - குற்றமற்ற இரண்டு மணிகளும் கிணின் என்று ஒலித்தன;
|