| கனகமாலையார் இலம்பகம் | 
1046  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) விடு பொறி அரவு என விளங்கு வெஞ்சிலை அடுகணை சிதறினார் - வீசுகின்ற தீப்பொறியையுடைய பாம்பைப் போல விளங்கும் கொடிய வில்லாலே அம்புகளை (ஆனிரை கொள்ள வந்தோர்) வீசினார்; வால்வளை ஆர்த்த-வெண் சங்குகள் முழங்கின; கால் இயல் இவுளி கடுகின - காற்றைப்போல இயங்கும் குதிரைகள் விரைந்தான; காண்டலும் - இவற்றைக் கண்டதும்; கோவலர் முந்து முடுகுபு காற்பெய்தார் - கோவலர் முற்பட ஆனிரையைக் காத்தற்கு முற்பட ஓடினார். 
 | 
| 
    (வி - ம்.) விடுபொறி : வினைத்தொகை. பொறி - தீப்பொறி, அடுகணை : வினைத்தொகை. காலியல் - காற்றைப்போல, முடுகுபு - முடுகி, காற்பெய்தார் - ஓடினார். 
 | 
( 294 ) | 
|   | 
| 
    (இ - ள்.) அளை செறி இரும்புலி அனைய ஆடவர் - குகையிலே தங்கிய பெரும்புலி போன்ற ஆடவர்கள்; மணிநிரை வளைத்தனர் - மணியையுடைய நிரையை வளைத்துக்கொண்டனர்; வன்கண் ஆயரும் வெருவரத்தக்க வெஞ்சொலால் விளைத்தனர் - கொடிய ஆயரும் அஞ்சத்தக்க கொடிய சொற்களால் வீரமொழி விளைத்தனராய்; பூசல் உளைத்தனர் - போரை வருந்திச் செய்தனர்; விட்டு உணர்த்த ஓடினார் - பிறகு போரைவிட்டுத் தெரிவிக்க அரசனிடம் ஓடினர். 
 | 
| 
    (வி - ம்.) அளை - குகை, இரும்புலி - பெரிய புலி, ஆடவர் ஈண்டு வீரர் என்பதுபட நின்றது. வெருவரத்தக்க - அஞ்சத்தக்க. பூசல் - போர். 
 | 
( 295 ) | 
வேறு
 | 
|  1852 | 
தோ்த்தொகைத் தானை மன்னன் |   |  
|   | 
  சீவகற் கிளைய நம்பி |   |  
|   | 
வார்த்தொகை முழவம் விம்ம |   |  
|   | 
  மல்லுறழ் தோளி னானை |   |  
|   | 
நீர்த்தொகைக் கழனி நாடு |   |  
|   | 
  நெடுநகர்ப் பெயரு நுங்கள் |   |  
|   | 
சீர்த்தொகைக் குலனு மெல்லாந் |   |  
|   | 
  தெரிந்தெமக் குரைமோ வென்றான். |   | 
 
 
 |