| கனகமாலையார் இலம்பகம் | 
1058  | 
 | 
  | 
|  1871 | 
துறக்கம் மிதுவே யெனுந்தொன்னகர் |   |  
|   | 
  மன்னன் மங்கை |   |  
|   | 
தொறுக்கொண்ட கள்வ ரிவரோவெனச் |   |  
|   | 
  சொல்லி நக்காங் |   |  
|   | 
கொறுக்கப் படுவா ரிவரென்றங் |   |  
|   | 
  கசதி யாடி |   |  
|   | 
வெறுக்கைக் கிழவன் மகளென்ன |   |  
|   | 
  விருந்து செய்தாள். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) துறக்கம் இதுவே என்னும் தொல் நகர் மன்னன் மங்கை - வானுலகம் இதுவே எனத் தகும் பழம்பதியின் மன்னன் மகள்; தொறுக் கொண்ட கள்வர் இவரோ எனச் சொல்லி நக்கு - ஆனிரை கொண்ட திருடர் இவரோ என்றுரைத்து நகைத்து; இவர் ஒறுக்கப்படுவார் என்று அசதி ஆடி - இனி இவர் தண்டஞ் செய்யத் தகுவர் என்று நகையாடி; அங்கு வெறுக்கைக் கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள் - அப் போது இருநிதிக் கிழவன் மகளென்னும்படி விருந்து செய்வித்தாள். 
 | 
| 
    (வி - ம்.) துறக்கம் - தேவருலகம், மன்னன் மங்கை; கனகமாலை, தொறு - ஆனிரை, ஆனிரை கொண்ட கள்வராதலான் இவர் தண்டிக்கப்படுவர் என்றவாறு. அசதியாடுதல் - பரிகசித்து நகுதல். வெறுக்கைக் கிழவன்; குபேரன். வெறுக்கைக்கிழவன், மகள் செய்யும் விருந்து போன்று சிறந்த விருந்து செய்தாள் என்றவாறு. 
 | 
( 315 ) | 
|  1872 | 
அருந்தீத் தொழிலே புரிந்தான்மறை யாய வெல்லாம் |   |  
|   | 
விருந்தா விரிப்பா னவன்சீவக சாமி வேறா |   |  
|   | 
விருந்தாற்கொ ரோலை கொடுத்தானெரி குண்ட லத்தாற் |   |  
|   | 
பொருந்தார் பொறியைப் புறநீக்குபு நோக்கு கின்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அருந் தீத்தொழிலே புரிந்தான் - அரிய வேள்வி யியற்றும் மரபினனான் புத்திசேனன்; மறை ஆய எல்லாம் விருந்து ஆவிரிப்பான் - மறைந்த காரியங்கள் எல்லாம் புதிதாக் கூறவேண்டி; அவன் சீவகசாமி வேறா இருந்தாற்கு - (வந்த) அவன் சீவகசாமி தனியே இருந்தவனுக்கு ஓர் ஓலை கொடுத்தான் - ஒரு திருமுகத்தைக் கொடுத்தான் : எரி குண்டலத்தால் பொருந்து ஆர் பொறியைப் புறம் நீக்குபு நோக்குகின்றான். ஒளிவிடும் குண்டலத்தால் பொருந்துதல் நிறைந்த குழையைப் புறத்தினின்றும் நீக்கி வாசிக்கின்றான். 
 | 
| 
    (வி - ம்.) பொறி, தத்தம் பொருள் வயின் தம்மொடு சிவணிய ஆகுபெயரிலேயாய்க் குழையை உணர்த்திற்று. 
 |