| விமலையார் இலம்பகம் | 
1090  | 
 | 
  | 
| 
 காரனிடத்துப் பொருந்திய நிலததைக் காளைக்குக் கொண்டு தந்து காவாமல் நீங்குமோ என்றாள். 
 | 
| 
    (வி - ம்.) காளை : சீவகன். கலி - கட்டியங்காரன். தந்தென வருவிக்க. 
 | 
| 
    கெலுழன் - கலுழன்; கருடன். கலுழ - மனமுருகும்படி. இத் திண்டோள் என்க. ஒழியுமோ என்புழி ஓகாரம் எதிர்மறை அதன் உடன்பாட்டுப் பொருளை வலியுறுத்தி நின்றது. காளைக்கு; முன்னிலைப் படர்க்கை. 
 | 
( 38 ) | 
| 1927 | 
இடத்தொடு பொழுது நாடி |   | 
  யெவ்வினைக் கண்ணு மஞ்சார் |   | 
மடப்பட லின்றிச் சூழ |   | 
  மதிவல்லார்க் கரிய துண்டோ |   | 
கடத்திடைக் காக்கை யொன்றே |   | 
  யாயிரங் கோடி கூகை |   | 
யிடத்திடை யழுங்கச் சென்றாங் |   | 
  கின்னுயிர் செகுத்த தன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கடத்திடைக் காக்கை ஒன்றே - காட்டிலுள்ள ஒரு காக்கையே; ஆயிரங்கோடி கூகை இடத்திடை - எண்ணிறந்த கூகையிருக்கின்ற இடத்திலே; அழுங்கச் சென்று - அவை வருந்துமாறு பகற்காலத்தே சென்று; ஆங்கு இன்உயிர் செகுத்தது அன்றே? - அங்கே அவற்றின் இனிய உயிரைக் கெடுத்தது அன்றோ?; (ஆகையால்) இடத்தொடு பொழுதும் நாடி - இடத்தையும் காலத்தையும் எண்ணி; எவ்வினைக் கண்ணும் அஞ்சார் - ஆண்டுச் செய்யும் எத் தொழிலுக்கும் அஞ்சாராய்; மடப்படல் இன்றிச் சூழும் மதி வல்லார்க்கு - அறியாமையிற்படுதலில்லாமல் ஆராயும் அறிவினையுடையார்க்கு; அரியது உண்டோ? - முடியாதது உளதோ? 
 | 
| 
    (வி - ம்.) இடம் - தகுந்த இடம். பொழுது - தகுந்த பொழுது. ”ஞாலங் கருதினுங் கைகூடும், காலம் கருதி இடத்தாற் செயின்” என்றார் வள்ளுவனாரும் (குறள். 484) ஆயிரங்கோடி காக்கை என்றது மிகுதிக்கோர் எண் காட்டியவாறு. எண்ணிறந்த காக்கை என்றவாறு. 
 | 
| ”பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் | 
 | 
| வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள். 481) | 
 | 
| 
    என்றார் வள்ளுவனாரும். 
 | 
( 39 ) | 
| 1928 | 
இழைபொறை யாற்ற கில்லா |   | 
  திட்டிடை தளர நின்ற |   | 
குழைநிற முகத்தி னார்போற் |   | 
  குறித்ததே துணிந்து செய்யார் |   | 
 
 
 |