| விமலையார் இலம்பகம் |
1117 |
|
|
|
(இ - ள்.) நிலவு வெண் கதிர் நீர்மைய பூந்துகில் - நிலவு போல வெண்கதிர் பரப்பும் தன்மையுடைய அழகிய ஆடை; கலவம் கண் புதையாது - மேகலையை மறையாமல்; கனற்றலின் - தானே நெகிழ்ந்து அவனைக் கனற்றுவதாலே; புலவு வேற் கண்ணினாள் முலைப் போகம் - புலால் கமழும் வேலனைய கண்ணினாளின் முலைப்போகமானது; உலகம் மூன்றும் உறுவிலைத்து என்ப - மூன்றுலகையும் பெறுகின்ற விலையுடையது என்பர்.
|
|
(வி - ம்.) அவள் கொளுத்த அவன் கோடலிற் கனற்றுதல் அவள் மேலாயிற்று.
|
( 94 ) |
| 1983 |
தேன வாங்கமழ் கண்ணியுந் தெவ்வர்த | |
மூன வாங்கதிர் வேலுறு காளையுங் | |
கான வாங்கடி நாறுமென் பள்ளிமேல் | |
வான வாம்வகை யால்வைகி னார்களே. | |
|
|
(இ - ள்.) தேன் அவாம் கமழ் கண்ணியும் - வண்டுகள் விரும்பும் மணங்கமழ் கண்ணியும்; தெவ்வர் தம் ஊன் அவாம் கதிர்வேல் உறு காளையும் - பகைவருடைய ஊனை விரும்பும் கதிர் வேல் கைக்கொண்ட காளையும்; கான் அவாம் கடிநாறும் மென்பள்ளிமேல் - கானம் விரும்பும் மணங் கமழும் மெல்லிய பள்ளியின் மேல்; வான் அவாம் வகையால் வைகினார்கள் - விண்ணும் விழையும் வகையில் இன்பம் நுகர்ந்தனர்.
|
|
(வி - ம்.) விண்ணுலகு இன்பம் நுகரும் இடமாகையால் அவரும் விரும்பும் வகையால் என்றார். இத்துணையும் மணம் புரிந்துகொண்ட அன்றைய நுகர்ச்சி கூறப்பட்டது.
|
( 95 ) |
வேறு
|
| 1984 |
வெண்மதி நெற்றி தேய்த்து | |
விழுத்தழும் பிருப்ப நீண்ட | |
வண்ணனன் மாடத் தங்க | |
ணகிற்புகை யமளி யேறிப் | |
பண்ணமை மகர வீணை | |
நரம்புரீஇப் பாவை பாட | |
மண்ணமை முழவுத் தோளான் | |
மகிழ்ச்சியுண் மயங்கி னானே. | |
|
|
(இ - ள்.) வெண்மதி நெற்றி தேய்த்து - வெண்திங்களின் தலை தேய்த்தலின்; விழுத் தழும்பு இருப்ப நீண்ட - சிறந்த தழும்பு இருக்கும்படி நீண்ட; அண்ணல் நல்மாடத்து அங்கண் -
|