| சுரமஞ்சரியார் இலம்பகம் | 
1145  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) மலர் ஏந்து சேக்கை - மலர் பொருந்திய அணையிலே; அகில் வளர்த்த இடுபுகையும் - அகில் வளர்த்த புகையும்; ஆய்ந்த மலர்க்கோதை அமிர்து உயிர்க்கும் நறும் புகையும் - அழகிய மலர்மாலைக்கு ஊட்டிய இனிமையுடைய நல்ல அகிற் புகையும்; கூந்தல் அகிற் புகையும் - கூந்தற்குப் புகைத்த அகிற் புகையும்; துகில் கொழுமென் நறும்புகையும் - ஆடைக்கு ஊட்டிக் கொழுவிய மெல்லிய அகிற்புகையும்; வாய்ந்த வரை மழையின் - பொருந்திய மலைமீது தவழும் முகிலென; உயர் மாடத்து எழுந்தன - உயர்ந்த மாடத்தே எழுந்தன. 
 | 
| 
    (வி - ம்.) மலரேந்து சேக்கை என்க. சேக்கை - படுக்கை. அமிர்து - இனிமை. வரை - மலை. மழை - முகில். 
 | 
( 38 ) | 
| 2033 | 
ஆசிலடு பாலமிர்தஞ் சிறியவயின் றம்பூங் |   | 
காசில்படி மாலைகல நொய்யமதி கவற்குந் |   | 
தூசுநறுஞ் சாந்தினிய தோடிவைக டாங்கி |   | 
மாசின்மட வார்கண்மணி வீணைநரம் புளர்ந்தார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆசு இல் அடு பால் அமிர்தம் சிறிய அயின்று - குற்றமற்ற காய்ச்சிய பாற்சோற்றைச் சிறிதளவு உண்டு; காசு இல் அம்கடி பூமாலை நொய்ய கலம் - குற்றம் அற்ற அழகிய மலர் மாலையும் திண்மையற்ற அணிகலனும்; மதிகவற்கும் தூசு - அறிவைக் கவலச் செய்யும் ஆடை; நறுஞ்சாந்து - நல்ல சந்தனம்; இனிய தோடு - அழகிய தோடு; இவைகள் தாங்கி - இவற்றை அணிந்து; மாசுஇல் மடவார்கள் - குற்றமற்ற பெண்கள்; மணி வீணை நரம்பு உளர்ந்தார் - அழகிய வீணையின் நரம்பைத் தடவி வாசித்தனர். 
 | 
| 
    (வி - ம்.) கூதிராதலின் பாலடிசில் கூறினார். 'உண்டிசுருங்குதல் பெண்டிர்க் கழகு' ஆதலின், 'சிறிது அயின்று' என்றார். 
 | 
| 
    புணர்ச்சித் தொழில் கருதி நொய்ய கலம் அணிந்தனர் என்பது கருத்து. 
 | 
( 39 ) | 
| 2034 | 
பூஞ்சதங்கை மாலைபுகழ்க் குஞ்சிப்பொரு வில்லார் |   | 
வீங்குதிர டோளுந்தட மார்பும்விரை மெழுகித் |   | 
தீங்கரும்பு மென்றனைய வின்பவளச் செவ்வாய்த் |   | 
தேங்கொளமிர் தார்ந்துசெழுந் தார்குழையச் சோ்ந்தார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பூஞ்சதங்கை மாலை புகழ்க்குஞ்சிப் பொரு இல்லார் - ஒருபுற மாலையினையும் குஞ்சினையுமுடைய ஒப்பற்ற ஆடவர் தமது; வீங்கு திரள் தோளும் தடமார்பும் விரைமெழுகி - பருத்த திரண்ட தோளும் பெரிய மார்பும் பொருந்த மணக் கலவையை மெழுகி; தீ கரும்பு மென்ற அனைய இன்பவளச் 
 |