| சுரமஞ்சரியார் இலம்பகம் | 
1152  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) கால் - காற்று. காமவல்லி - ஒரு பூங்கொடி. நங்கை : சுரமஞ்சரி, தத்தை : காந்தருவதத்தை. பவளச் செவ்வாய்த்தத்தை என்றது கிளியை. 
 | 
( 50 ) | 
| 2045 | 
அன்பொட்டி யெமக்கோர் கீதம் |   | 
  பாடுமி னடித்தி யாரு |   | 
முன்பட்ட தொழிந்து நுங்கண் |   | 
  மூகவியர் முனிவு தீர்ந்தார் |   | 
பொன்றெட்டேம் யாமு நும்மைப் |   | 
  போகொட்டோம் பாடல் கேளா |   | 
தென்பட்டு விடினு மென்றா |   | 
  ரிலங்குபூங் கொம்பொ டொப்பார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இலங்கு பூங்கொம்பொடு ஒப்பார் - விளங்கும் பூங்கொம்பு போன்ற அம் மங்கையர்; அடித்தியாரும் முன்பட்டது. ஒழிந்து நுங்கள் முகவியர் முனிவு தீர்ந்தார் - அடிச்சி யாராகிய சுரமஞ்சரியாரும் முன்னர் நெஞ்சிற் கொண்ட நோன்பு நீங்கி நும்மிடத்து முகம் புகுதலையுடையராய்ச் சீற்றம் ஒழிந்தனர்; அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடுமின் - (இனி நீரும் எம்மிடம்) அன்பு செய்தலைப் பொருந்தி எமக்கு ஓர் இசையைப் பாடுமின்; என் பட்டு விடினும் - என்ன நேர்ந்தாலும்; யாமும் பாடல் கேளாது நும்மைப் போக ஒட்டோம் - யாங்களும் பாடலைக் கேளாமல் உம்மைப் போகவிடோம்; பொன்தொட்டேம் என்றார் - திருமகள் போலும் இவளைத் தொட்டு ஆணையிட்டோம் என்றனர். 
 | 
| 
    (வி - ம்.) மூத்த அந்தணன் ஆதலின் அடித்தியார் என்றார். அடித்தியார் : ஒருவரைக் கூறும் பன்மை. 
 | 
| 
    அன்பு ஓட்டி - அன்பாலே எம்மைப் பொருந்தி, அடித்தியார் என்றது சுரமஞ்சரியை, முகவியர் - முகம் புகுதலையுடையர். முகவியர் முனிவு தீர்ந்தார் என்பதற்கு முகத்திலுள்ள வியர்வையும் வெறுப்பும் நீங்கினர் எனலும் ஒன்று. பொன் : திருமகள் : ஈண்டுச் சுரமஞ்சரி. போக ஓட்டோம் - போகொட்டோம் என நிலைமொழி ஈறுகெட்டுப் புணர்ந்தது. என்பட்டு விடினும் - என்ன நேரினும். 
 | 
( 51 ) | 
| 2046 | 
பாடுதும் பாவை பொற்பே |   | 
  பற்றிமற் றெமக்கு நல்கி |   | 
னாடமைத் தோளி னீரஃ |   | 
  தொட்டுமேற் கேண்மி னென்ன |   | 
நாடியார் பேயைக் காண்பார் |   | 
  நங்கைகா ளிதுவு மாமே |   | 
யாடுவ தொன்று மன்றிவ் |   | 
  வாண்மக னுரைப்ப தென்றார். |   | 
 
 
 |