| சுரமஞ்சரியார் இலம்பகம் | 
1155  | 
 | 
  | 
| 
 மாகிய நம்மிடத்து உளதாகிய; ஆர்வம் உறும் நெஞ்சம் மாலை அழுங்குவிக்கும் - ஆவல்கொண்ட நெஞ்சினை மாலை வருத்தும். 
 | 
| 
    (வி - ம்.) இது முதல் மூன்று செய்யுளும் சீவகன் பாடிய இசைப் பாடல்கள் என்க. தோள் தொடிவளை என மாறுக. தொடி - வட்டம். தொய்யில் எழுதப்பட்ட முலை என்க. வடி - மாவடு, கேழ் - நிறம். மலர் நெடுங்கண் : வீனைத்தொகை. 
 | 
( 55 ) | 
| 2050 | 
ஐதேந் தகலல்கு லாவித் தழலுயிராக் |   | 
கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுளலைப்பக் |   | 
கண்ணீர் கவுளலைப்பக் கையற்றி யாமினையப் |   | 
புண்ணீரும் வேலிற் புகுந்ததான் மாலை. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஐதுஏந்து அகல் அல்குல்! - மெல்லிய காஞ்சியை ஏந்திய அல்குலையுடையாய்!; ஆவித்து அழல் உயிராக் கைசோர்ந்து அணல் ஊன்றி - கொட்டாவி கொண்டு நெருப்பென மூச்செறிந்து கை சோர்வுற்றுக் கன்னத்திலே ஊன்றுதலாலே; கண்ணீர் கவுள் அலைப்ப - கண்ணீர் கன்னத்தை வருத்தி வீழும்; கண்ணீர் கவுள் அலைப்பக் கையற்று யாம் இனைய - அங்ஙனம் அலைத்தலின், யாம் கையற்று அதன்மேலே வருந்தும்படி; புண் ஈரும் வேலின் மாலை புகுந்தது - புண்ணைப் பிளக்கும் வேலைப் போல மாலை புகுந்தது. 
 | 
| 
    (வி - ம்.) 'வீழும்' என வருவிக்க. 
 | 
| 
    ஐது - மென்மையுடையது; என்றது ஈண்டுக் காஞ்சி என்னும் ஓரணிகலனை - அல்குல்; விளி, ஆவித்து - கொட்டாவி விட்டு, கையற்று - செயலற்று. இனைய - வருந்தும்படி. வேலின் - வேல்போன்று. 
 | 
( 56 ) | 
| 2051 | 
அவிழ்ந்தேந்து பூங்கோதை யாகத் தலர்ந்த |   | 
முகிழ்ந்தேந் திளமுலைமேற் பொன்பசலை பூப்பப் |   | 
பொன்பசலை பூப்பப் பொருகயற்கண் முத்தரும்ப |   | 
வன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அவிழ்ந்து ஏந்து பூங்கோதை! - மலர்ந்து விளங்கும் பூங்கோதாய்!; ஆகத்து அலர்ந்த முகிழ்ந்து ஏந்து இள முலைமேல் பொன்பசலை பூப்ப - மார்பிலே தோன்றி அரும்பி நிமிர்ந்த இளமுலைமேல் பொன் போன்ற பசலை உண்டாகத் தோன்றும்; பொன்பசலை பூப்பப் பொருகயல் கண்முத்து அரும்ப - அங்ஙனம் பொன் பசலையுண்டாகவும் காதொடு பொருங் கயற்கண்கள் முத்தனைய நீரை அரும்பவும்; அன்பு உருகும் நெஞ்சம் மாலை அழுங்குவிக்கும் - அன்பினாலே உருகும் நெஞ்சை மாலை வந்து வருத்தும். 
 |