| சுரமஞ்சரியார் இலம்பகம் | 
1158  | 
 | 
  | 
| 2055 | 
ஆடவ ரிரிய வேகி |   | 
  யஞ்சொல்லார் சூழக் காமன் |   | 
மாடத்து ளிழிந்து மற்றவ் |   | 
  வள்ளலை மறைய வைத்துச் |   | 
சூடமை மாலை சாந்தம் |   | 
  விளக்கொடு தூப மேந்திச் |   | 
சேடியர் தொழுது நிற்பத் |   | 
  திருமகள் பரவு மன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆடவர் இரிய அம்சொலார் சூழ ஏகி - (அரசன் ஆணையால்) ஆடவர் விலக, அழகிய மொழியாரான பெண்கள் சூழச் சென்று; மாடத்துள் இழிந்து - காமன் கோட்டத்திலே இறங்கி; அவ் வள்ளலை மறைய வைத்து - சீவகனை மறைய வைத்து; சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி - சூடுதற்கான மாலையும் சாந்தமும். விளக்கும் தூபமும் எடுத்துக் கொண்டு; சேடியர் தொழுது நிற்ப - பணிமகளிர் காமனைத் தொழுதவாறு நிற்க; திருமகள் பரவும் - திருமகள் அனையாள் பரவுகின்றாள். 
 | 
| 
    (வி - ம்.) ஆடவர் அரசன் ஆணையால் விலக என்க. காமன் மாடம் - காமன் கோயில், (கோட்டம்). வள்ளல்; சீவகன், சேடியர் - பணிமகளிர். திருமகள் : உவமவாகுபெயர்; சுரமஞ்சரி. அன்று, ஏ : அசைகள். 
 | 
( 61 ) | 
| 2056 | 
பொன்னிலஞ் சென்னி புல்ல |   | 
  விடமுழந் தாளை யூன்றி |   | 
மின்னவிர் மாலை மென்பூங் |   | 
  குழல்வலத் தோளின் வீழக் |   | 
கன்னியங் கமுகின் கண்போற் |   | 
  கலனணி யெருத்தங் கோட்டித் |   | 
தன்னிரு கையுங் கூப்பித் |   | 
  தையலீ துரைக்கு மன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இட முழந்தாளை ஊன்றி - இட முழந்தாளை ஊன்றி; மின் அவிர் மாலை மென் பூங்குழல் வலத்தோளில் வீழ - ஒளிவீசும் மாலையும் மென்மையான மலர்க்குழலும் வலத் தோளிலே விழ; கன்னிஅம் கமுகின் கண்போல் கலன் அணி எருத்தம் கோட்டி - ஈனாத இளங்கமுகின் கண்போலக் கலனை அணிந்த கழுத்தை வலத்தே சாய்த்து; பொன்நிலம் சென்னி புல்ல - பொன் தரையிலே முடிபொருந்த (வணங்கியெழுந்து); 
 |