| நாமகள் இலம்பகம் | 
117  | 
  | 
|  212 | 
ஆரறி விகழ்தல் செல்லா வாயிரஞ் செங்க ணானுங் |  
|   | 
கூரறி வுடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் |  
|   | 
பேரறி வுடையை நீயும் பிணையனாட் கவலஞ் செய்யு |  
|   | 
மோரறி வுடையை யென்றா னுருத்திர தத்த னென்பான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆரறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங்கணானும் - பேரறிவை மற்றோர் இகழ்தல் இயலாத ஆயிரங் கண்ணனான இந்திரனும்; கூர்அறிவு உடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் - கூரிய அறிவுடைய பண்பினராம் அமைச்சர் சொல்லின் பொருளைக் குறிக்கொண்டு நடப்பான்; நீயும் பேரறிவு உடையை - இந்திரனைப்போல நீயும் பேரறிவு உடையாய்; பிணை அனாட்கு அவலம் செய்யும் ஓர் அறிவுடையை என்றான் உருத்திரதத்தன் என்பான் - எனினும் இப்போது பிணைபோன்ற விசயைக்குத் துன்பம் உண்டாக்கும் ஓரறிவு உடையை ஆனாய் என்று உருத்திரதத்தன் உரைத்தான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) அவலம் : அரசன் கொலை செய்யப்படல். 
 | 
  | 
| 
    [நிமித்தகன் கூறியவற்றை அரசன் கேளாமையின் உருத்திர தத்தன் இங்ஙனம் - உரைத்தான்.] 
 | 
  | 
| 
    ஆர் அறிவு - நிரம்பிய அறிவு. கூர்அறிவு - கூர்த்த அறிவு. நீயும் என்புழி உம்மை சிறப்பு. பிணையனாள்- பெண்மான் போன்ற விசயை. ஓர் அறிவு என்றது காமமே கன்றிநின்ற இவ்வோரறிவே என்பதுபட நின்றது. 
 | 
( 183 ) | 
|  213 | 
அளந்துதாங் கொண்டு காத்த வருந்தவ முடைய நீரார்க் |  
|   | 
களந்தன போக மெல்லா மவரவர்க் கற்றை நாளே |  
|   | 
யளந்தன வாழு நாளு மதுவெனக் குரைய லென்றான் |  
|   | 
விளங்கொளி மணிகள் வேய்ந்து விடுசுட ரிமைக்கும் பூணான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) விளங்கு ஒளிமணிகள் வேய்ந்து விடுசுடர் இமைக்கும் பூணான் - ஒளிவீசும் மணிகள் பதித்து ஒளிவிடும் பூண்களையுடைய சச்சந்தன்; தாம் அளந்துகொண்டு காத்த அருந்தவம் உடையார்க்கு - தாம் அளவாகக்கொண்டு போற்றிய அரிய தவத்தினர்க்கு; அற்றைநாளே போகம் எல்லாம் அளந்தன - கருவில் அமைந்தபோதே நுகர்ச்சியெல்லாம் அளவிடப்பட்டுள்ளன ; அவரவர்க்கு வாழும் நாளும் அளந்தன - அவரவர்க்கு அப்போது வாழ்நாட்களும் அளவிடப்பட்டுள்ளன; அது எனக்கு உரையல் என்றான் - (ஆகவே) நிலையாமையைப் பற்றி நீ எனக்கு உரைத்தல் வேண்டா என்று கூறினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) போகமும் என்னும் உம்மை கூறிற்றிலர், செஞ்சொலாய் முற்படக் கிடத்தலின். 'நிலம்திரு நீங்கும்' (204) என நிமித்திகன் 
 | 
  |