| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1175 |
|
|
|
(வி - ம்.) அவன் மார்பு உற முயங்காமையின் பிறர் முயங்க வைத்தான் என்று கருதிப் பிணங்கினாள்.
|
|
'மல்லலங் கங்கை போலும் பலர்முயங் காரமார்பிற் புல்லன்மின் போமின்' என்னுமிதனோடு ”பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு” என்னும் திருக்குறளை (1311) ஒப்பு நோக்குக. ஊடன் மிகுதி தோன்றப் புல்லன்மின் போமின் வேண்டா என்று வற்புறுத்தோதினள்.
|
( 90 ) |
| 2085 |
வட்டிகைப் பாவை நோக்கி | |
மகிழ்ந்திருந் திலிரோ வென்னாத் | |
தொட்டிமை யுருவந் தோன்றச் | |
சுவரையே பொருந்தி நின்றாய் | |
கட்டழ குடைய நங்கை | |
நீயெனக் கருதிக் கண்ணா | |
னொட்டியா னோக்கிற் றென்றா | |
னொருபிடி நுசுப்பி னாட்கே. | |
|
|
(இ - ள்.) வட்டிகைப் பாவை நோக்கி மகிழ்ந்திருந்திலிரோ என்னா - வட்டிகையால் சுவரில் எழுதிய பாவையை நோக்கி மகிழ்வுடன் இருந்திலிரோ என்று வினவ; ஒரு பிடி நுசுப்பினாட்கு - ஒரு பிடியளவு இடையாளுக்கு; தொட்டிமை உருவம் தோன்றச் சுவரையே பொருந்தி நின்றாய் - ஒற்றுமையாக நின்உருவம் விளங்கச் சுவரிலே பொருந்தி நின்றனை; கட்டழகுடைய நங்கை நீ எனக் கருதி - பேரழகுடைய நங்கையாகிய நீயே அவ்வுருவம் என்று நினைத்து; கண்ணால் ஒட்டி யான் நோக்கிற்று என்றான் - கண்ணால் ஒப்பிட்டு நோக்கினேன் என்றான்.
|
|
(வி - ம்.) அவன்மார்புற முயங்காமையின் ஊடியவள் சுவரிலே பொருந்தி நின்றாளாக, அச் சுவரிலெழுதிய பாவை இவள் போலவே இருத்தலின் மயங்கிய அவன் இரண்டுருவினையும் ஒப்பிட்டுப்பார்த்தான். ஒப்பிட்டு நோக்கியபோது அவ்வோவியம் அழகுற இருப்பதாக எண்ணி நோக்கினானென்று மேலும் ஊடினாள்.
|
|
நச்சினார்க்கினியர் அவளுருவம் பளிங்குச் சுவரிலே பொறித்ததனை யிவளென்று கருதி வணங்கினானென்றும், அதுகண்டு புலந்தாளென்றுங் கூறுவர். 'வட்டிகைப் பாவை' என்றும், 'சுவரையே பொருந்தி நின்றாய்' என்றும் வருவதால் அவர் உரை பொருந்தாது.
|
( 91 ) |
| 2086 |
நுண்டுகி னெகிழ்ந்த வல்குன் | |
மணிபரந் திமைப்ப நொந்து | |
கண்களை யிடுகக் கோட்டிக் | |
காமத்திற் செயிர்த்து நோக்கிக் | |
|