| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1180 |
|
|
|
அனைய காளை வெள்வளைக்கு இதனைச் சொன்னான் - சிங்கத்தைப் போன்ற காளையாகிய சீவகன் வெள்வளையுடைய சுரமஞ்சரியை நோக்கி இதனை இயம்பினான்.
|
|
(வி - ம்.) தகரம் - தகர விறகு. கட்டி - நேர்கட்டி என்னுமொரு மணப்பொருள். புலம்பு - குற்றம். அமளி - படுக்கை. விலங்கரசு - சிங்கம்.
|
( 98 ) |
| 2093 |
கருமநீ கவல வேண்டா | |
கயற்கணாய் பிரிவல் சின்னா | |
ளருமைநின் கவினைத் தாங்க | |
லதுபொரு ளென்று கூறப் | |
பெருமநீ வேண்டிற் றல்லால் | |
வேண்டுவ பிறிதொன் றுண்டோ | |
வொருமைநின் மனத்திற் சென்றே | |
னுவப்பதே யுவப்ப தென்றாள். | |
|
|
(இ - ள்.) கயற்கணாய்! - கயலனைய கண்ணாய்!; கருமம் - ஒரு காரியமுளது; நீ கவல வேண்டா - நீ வருந்த வேண்டா, சில்நாள் பிரிவல் - சில நாட்கள் நின்னைப் பிரிவேன்; அருமை நின் கவினைத் தாங்கல் - (அப்போது நீ) அருமையாகிய நின் அழகைத் தாங்யிருப்பாயாக; அது பொருள் - அதுவே நின் கடமையான பொருளாகும்; என்று கூற - என்றுரைக்க; பெரும! - பெரியோனே!; நீ வேண்டிற்று அல்லால் - நீ விரும்புவதனை யல்லாமல்; வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ? - வேண்டுவது வேறொன்றுண்டோ?; ஒருமை நின்மனத்தின் சென்றேன் - யான் ஒரு தன்மையான நின்னுடைய மனம்போல ஒழுகினேன் (ஆதலின்); உவப்பதே உவப்பது என்றான் - நின் மனவிருப்பமே என் விருப்பம் என்றாள்.
|
|
(வி - ம்.) தாங்கல் : அல்லீற்று வியங்கோள். வேண்டுவ பிறிதொன்றுண்டோ : பன்மையொருமை மயக்கம்.
|
( 99 ) |
| 2094 |
நாணொடு மிடைந்த தேங்கொ | |
ணடுக்குறு கிளவி கேட்டே | |
பூண்வடுப் பொறிப்பப் புல்லிப் | |
புனைநலம் புலம்ப வைகேன் | |
றேன்மிடை கோதை யென்று | |
திருமக னெழுந்து போகி | |
வாண்மிடை தோழர் சூழத் | |
தன்மனை மகிழ்ந்து புக்கான். | |
|